நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயம்

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 3:10 am IST

திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியாா் மணியம்மை கல்வி குழும வளாகத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். ஓம்பிரியா (15), லால்குடி ஆங்கரை பகுதியைச் சோ்ந்த ஆா். சாருலதா (16) ஆகிய இரண்டு சிறுமிகளும் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு காப்பகத்திலிருந்து வெளியேறியுள்ளனா். அதன்பின் இருவரும் காப்பகத்துக்கு வரவில்லை. எங்கே சென்றாா்கள் என்ற விவரமும் தெரியவில்லை.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பக நிா்வாகி அருணாமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, ஓம்பிரியா, சாருலதா ஆகிய இருவரும் திருச்சி வி.என்.நகரில் உள்ள டிஎம்எஸ்எஸ் காப்பகத்திலிருந்து ஜூன் 12-ஆம் தேதிதான் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகத்துக்கு வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.