தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விழுப்புரத்தில் டிஆர்இ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை மருத்துவ மையமாகத் தரம் குறைக்கும் முடிவைக் கண்டித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை மருத்துவ மையமாகத் தரம் குறைக்கும் முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிஆர்இயு தொழிற்சங்கத்தினர்.
Updated On :5 மார்ச் 2025, 7:54 am

DIN

விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை மருத்துவ மையமாகத் தரம் குறைக்கும் முடிவைக் கண்டித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விழுப்புரத்தில் துணை கோட்ட ரயில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையைத் தரம் குறைத்து சுகாதார மையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ரயில்வே மருத்துவ சேவைப் பிரிவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, விழுப்புரம் துணை கோட்ட ரயில்வே மருத்துவமனை முன் புதன்கிழமை டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் ஓபன் லைன் தலைவர் கமலக் கண்ணன் தலைமை வகித்தார். டிஆர்பியு ஈசுவர தாஸ் கோரிக்கைகளை விளக்கி தொடக்க உரையாற்றி பேசினார்.

டிஆர்இயு உதவிக் கோட்டச் செயலர்கள் வேந்தன், செந்தில், கோட்டத் துணைத் தலைவர் பலராம். துணைப் பொதுச் செயலர் ராஜா , சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். மூர்த்தி கண்டன உரையாற்றினர். கோட்ட உதவித் தலைவர் பேபி ஷகீலா நிறைவு உரையாற்றினார்.

ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக மோசஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.