குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!

அமெரிக்க சிறுவர்கள் காவல் மையத்தில் சட்டவிரோத சண்டைப் போட்டிகள் நடத்தப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2025, 1:58 pm IST

அமெரிக்காவில் சிறுவர்கள் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டை போட்டிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் 30 அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் பட்ரினோஸ் சிறார் தடுப்பு காவல் மையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அங்குள்ள சிறுவர்களுக்கு இடையே சண்டை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

‘கிளாடியேட்டர் சண்டைகள்’ என வர்ணிக்கப்படும் இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 143 சிறுவர்களுக்கு இடையே நடந்த இந்த சட்டவிரோத போட்டிகளை அந்த சிறையின் அதிகாரிகள் ஊக்குவித்தும் நடத்தியும் வந்ததாகவும் அதனை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மொத்தம் 69 முறை அரங்கேறிய இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகளினால் அதில் பங்குபெற்ற சிறுவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 30 சிறைத்துறை அதிகாரிகளின் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் லாஸ் பட்ரினோஸ் தடுப்புக் காவல் மையம் கடந்த ஆண்டு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் 22 பேர் கடந்த மார்ச்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதமுள்ள 8 அதிகாரிகள் ஏப்ரல் மாதம் தங்களது குற்றத்திற்காக ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.