திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!

அமெரிக்க சிறுவர்கள் காவல் மையத்தில் சட்டவிரோத சண்டைப் போட்டிகள் நடத்தப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2025, 8:28 am

அமெரிக்காவில் சிறுவர்கள் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டை போட்டிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் 30 அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் பட்ரினோஸ் சிறார் தடுப்பு காவல் மையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அங்குள்ள சிறுவர்களுக்கு இடையே சண்டை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

‘கிளாடியேட்டர் சண்டைகள்’ என வர்ணிக்கப்படும் இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 143 சிறுவர்களுக்கு இடையே நடந்த இந்த சட்டவிரோத போட்டிகளை அந்த சிறையின் அதிகாரிகள் ஊக்குவித்தும் நடத்தியும் வந்ததாகவும் அதனை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மொத்தம் 69 முறை அரங்கேறிய இந்த சட்டவிரோத சண்டைப் போட்டிகளினால் அதில் பங்குபெற்ற சிறுவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 30 சிறைத்துறை அதிகாரிகளின் மீது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் லாஸ் பட்ரினோஸ் தடுப்புக் காவல் மையம் கடந்த ஆண்டு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் 22 பேர் கடந்த மார்ச்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதமுள்ள 8 அதிகாரிகள் ஏப்ரல் மாதம் தங்களது குற்றத்திற்காக ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.