மத்திய கிழக்கு நாடான குவைத்தில் இன்று (மார்ச் 8) சில மணி நேரத்திற்கு விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத்தில், தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திருப்பப்பட்டதாகவும், அந்நாட்டிலிருந்தும் விமானங்கள் இயக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான கண்கானிப்பு தரவுகளின் படி குவைத் நாட்டில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் திருப்பப்பட்டு, அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மகளிர் நாள்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!
கடந்த சில நாள்களாக அந்நாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாரினால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், சில மணி நேரம் கழித்து காலை 8 மணியளவில் (ஜி.எம்.டி.) விமான சேவை மீண்டும் துவங்கியது. மேலும், குவைத் நகரத்திலுள்ள சர்வதேச விமான நிலையம்தான் அந்நாட்டின் வான்வழி சேவைக்கு முக்கிய தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!

மேற்காசிய போா்: விமானப் போக்குவரத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


