கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பசு கடத்தல்: காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம்!

ஒடிசாவில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்ததைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2025, 10:35 am

DIN

ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தில் பசு கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பால்பூரிலிருந்து மேற்கு வங்கத்திற்கு இன்று (மார்ச் 11) காலை பசுக்களை ஏற்றி சென்ற வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தின் பாதுகாப்பிற்காக அதனை பின் தொடர்ந்து வந்த மற்றொரு வாகனத்திலிருந்த நபர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் புர்லாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.