சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

ஔவுரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என மக்களவையில் பேசப்பட்டதைப் பற்றி...

News image

சிவசேனை மக்களவை உறுப்பினர் நரேஷ் ம்ஹஸ்கே - dinamani online

Updated On :12 மார்ச் 2025, 4:14 pm

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீபின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார்.

மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் தாணே மக்களவைத் தொகுதி உறுப்பினர் நரேஷ் ம்ஹஸ்கே, இந்தியாவில் மொத்தம் 3,691 முக்கிய தளங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) அறிவித்துள்ளதாகவும் அதில் 25 சதவிகிதம் முகலாய மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு உரியது என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் குல்தாபாத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீபின் கல்லறை பாதுகாப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர் ஔவுரங்கசீப், மகாராஜா சத்ரபதி சம்பாஜியை கொலை செய்ததுடன் ஹிந்துக்களின் கோயில்களை சூரயாடியதாகக் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஔவுரங்கசீப் போன்ற கொடுமைக்காரர்களின் கல்லறை பாதுகாப்பபட வேண்டிய அவசியம் என்ன? அவரை போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட அனைவரது நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக, சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள பேரரசர் ஔவுரங்கசீபின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.