ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் பெய்த கன மழையை தொடர்ந்து நேற்று (மார்ச் 17) மலாகா நகரத்தின் அருகிலுள்ள காம்பனில்லாஸ் கிராமத்திலுள்ள ஆற்றின் கரைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளால் அப்பகுதியில் வசிக்கும் 365 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இன்று (மார்ச் 18) கூறப்பட்டுள்ளது.
மலாகாவின் மோசமான வானிலையால் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட அண்டலூசியா மாகாணத்தின் உள்துறை அதிகாரி அண்டோனியோ சான்ஸ் கூறுகையில், அம்மாகாணத்திலுள்ள 19 ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ’ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!
மேலும், அண்டலூசியா மாகாணத்தின் 40 நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், அங்குள்ள தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 நவம்பரில் இதே மலாகா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெயத கன மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சுமார் 233 பேர் பலியானார்கள். அதில் பெரும்பாலானோர் வேலனெசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியை சந்தித்த ஸ்பெயின் நாட்டில் 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையினால் அந்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் பாஜகவில் இருந்து விலகல்: அண்ணாமலையுடன் கைகோக்க முடிவு

வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் ஒரு வாரமாக சிக்கிய 5 போ் உயிருடன் மீட்பு

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

வெள்ளம், வெப்ப அலையை எதிகொள்ள தயாா்நிலை: அமித் ஷா தலைமையில் நாளை உயா்நிலை கூட்டம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



