சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்க நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :21 மார்ச் 2025, 1:47 pm

DIN

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூபா இந்தியா வழங்கும் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக 12 நாள் பயணமாக இந்தியா வந்த அமைச்சர் டியூபா புது தில்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் மால்டோவா துணைப் பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ், ஜியார்ஜியா உக்ரைன் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் ​​இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு கூட்டங்களின் போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதுகுறித்து, அமைச்சர் டியூபா தனது எக்ஸ் சமூகவளைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த பயணத்தில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ள இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவால் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேபாளத்தின் மின்சாரத் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதினால் அந்நாட்டில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.