மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழைக்காலத்தில் எஸ்ஐஆர் பணியை செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்: கனிமொழி எம்.பி.

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்....

News image
திமுக எம்.பி. கனிமொழி
Updated On :29 நவம்பர் 2025, 9:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது, இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பிரச்னை எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரவில்லை, இதே போல கல்விக்காக வரவேண்டிய பல கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், அதற்காக ஒரு குழு வந்து பல ஆய்வுகளை செய்துவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் தற்போதுவரை எந்த பதிலும் இல்லை.

மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கான முக்கியமான பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக எஸ்ஐஆர் உள்ளது. பல மாநிலங்களில் பிஎல்ஒ-க்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம், தமிழ்நாட்டில் மிகக் குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக தான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழல் உள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.

மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும், மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை விட்டு விட்டு, எஸ்ஐஆர் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இது மக்கள் குறித்த அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் அதுவும் குறுகிய நேரத்தில் போதிய அவகாசம் இல்லாமல் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என்று கனிமொழி கூறினார்.

summary

Officials are forced to do SIR work during the rainy season: Kanimozhi MP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.