சென்னை: மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) செய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது, இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பிரச்னை எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைக்கு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரவில்லை, இதே போல கல்விக்காக வரவேண்டிய பல கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், அதற்காக ஒரு குழு வந்து பல ஆய்வுகளை செய்துவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் தற்போதுவரை எந்த பதிலும் இல்லை.
மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கான முக்கியமான பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக எஸ்ஐஆர் உள்ளது. பல மாநிலங்களில் பிஎல்ஒ-க்கள் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம், தமிழ்நாட்டில் மிகக் குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாக தான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழல் உள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.
மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும், மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பணிகளை விட்டு விட்டு, எஸ்ஐஆர் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இது மக்கள் குறித்த அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் அதுவும் குறுகிய நேரத்தில் போதிய அவகாசம் இல்லாமல் அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது என்று கனிமொழி கூறினார்.
Summary
Officials are forced to do SIR work during the rainy season: Kanimozhi MP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூகவலைதள தகவல்களை பகுத்தறிவுடன் அணுகவேண்டும்: கனிமொழி எம்.பி.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்- கனிமொழி
மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்! தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை! கனிமொழி

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



