எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை: கனிமொழி

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி. பேசியது பற்றி...

News image
திமுக எம்.பி. கனிமொழி- ANI
Updated On :28 பிப்ரவரி 2026, 8:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த 10 நாள்களுக்குள் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.

மக்கள் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிக்கையைத்தான் வெளியிடுவோம். திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் மற்றும் திமுக மீதான நம்பிக்கையினாலேயே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரின் இந்த முடிவு, முதல்வர் ஸ்டாலினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டுமே" என்று தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.