குடிநீா் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்!

திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் தொடர்பாக...
குடிநீா்  கேட்டு  காலிக்குடங்களுடன்  சாலை மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மக்கள்.
குடிநீா்  கேட்டு  காலிக்குடங்களுடன்  சாலை மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மக்கள்.கோப்புப்படம்
Updated on
1 min read

திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே சிற்றடையா நல்லூர் பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி, மாநகராட்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Summary

The public staged a road blockade to protest against the lack of drinking water supply

குடிநீா்  கேட்டு  காலிக்குடங்களுடன்  சாலை மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மக்கள்.
பிரதமர் வருகை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com