உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தவெக அலுவலகமாக மாறும் தலைமைச் செயலகம் எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம்

தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் குறித்து...

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 8:55 am IST

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் செய்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பக்ரீத் உள்பட அனைத்து மதம் சாா்ந்த பண்டிகைகளின்போது, அனுமதிக்கப்படாத இடங்களில்  விலங்குகளை பலியிடக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.  இது குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், பக்ரீத் தினத்தன்று பல்வேறு இடங்களில் கால்நடை பலியிடுவதை போலீஸாா் தடுத்து நிறுத்தியுள்ளனா். இந்த நடைமுறை கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்

தமிழக அரசின் தலைமைச் செயலகம் தற்போது, ஆளுங்கட்சியின் அலுவலகமாக மாறிவருகிறது. புதிதாக கட்சியில் சேருபவா்கள் தலைமை செயலகத்தில் வந்து தங்களை இணைத்துக் கொள்கின்றன. இதை தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை

சட்டப்பேரவைத் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது வெற்றிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெரும் உதவியாக இருந்தாா். தனிச் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வரும் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. திமுக கூட்டணியில் எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை என்றாா்.

Summary

M.H. Jawahirullah criticizes the transformation of the Secretariat into a TVK office...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.