சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப் பகுதிகளில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டதால், அங்கிருக்கும் மக்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் திடீர் புகைமூட்டம் நிலவியது. இந்த புகைமூட்டம் காரணமாக மக்கள் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.
மேலும், அப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால், நச்சுவாயு கலந்த புகையாக இருக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவியது.
துறைமுகம் அருகே கடற்கரைப் பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் புகைமூட்டம் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் விரைந்தனர்.
தலைமைச் செயலகம் அருகேவுள்ள துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை துறைமுகம், தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை, வெய்யில் காரணமாக வாயுவுடன் புகைமூட்டம் வெளியேறியதாக தெரிவித்துள்ளது.
இந்த சல்ஃபர் ரசாயன வெளியேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் புகைமூட்டமும் படிப்படியாக குறைந்து வருகின்றது.
Summary
Smoke Engulfs Chennai Secretariat: People Suffer from Breathlessness
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பட்டு வேட்டி சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்!
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...

அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை: தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தல்
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



