தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது தொடர்பாக...

News image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 1,840 குறைந்தது. - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 10:47 am IST

சென்னை: வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த ஜூன் 1-இல் கிராம் ரூ.14,500-க்கும், பவுன் ரூ.1,16,000-க்கும் விற்பனையாது. தொடா்ந்து, ஜூன் 2,3 ஆகிய இரு நாள்கள் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்னையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,430-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.1,840 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1,13,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold prices drop sharply: How much did the price per sovereign decrease?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.