பெண்களின் முகம் மாசு மருவின்றி ஜொலிக்க பயனுள்ள டிப்ஸ்!

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்
பெண்களின் முகம் மாசு மருவின்றி ஜொலிக்க பயனுள்ள டிப்ஸ்!
Published on
Updated on
1 min read

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.  கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு, நல்ல வைத்தியம் கஸ்தூரி மஞ்சள்.  

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போகும் முன் 1 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில்  குழைத்து முகத்தில் தடவி சிறுது நேரம் வைத்திருந்து பின்னர். நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சளும்  உடனடியாக  முகத்தில் உள்ள முடிகளை  நீக்கி விடாது.

நாளடைவில் தான் போக்கும்; ஆனால், புதிதாக முடிகளை வளர விடாது. அதனால், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். மேலும், நல்ல வழுவழுப்பான முக அழகையும் பெறலாம்.

சரும பிரச்னைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசி வர வேண்டும் அல்லது குளிக்க போகும் முன் கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன்  கஸ்தூரி மஞ்சள் தூளை பூசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் தினமும் நேரம் கிடைக்கும் போது முகத்தில் தடவி வைத்திருந்து நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு  செய்து வர  சரும பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com