உங்கள் பாதம் மெத் மெத்தென்று பளிச்சென்று விளங்க என்ன செய்யலாம்?

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான
உங்கள் பாதம் மெத் மெத்தென்று பளிச்சென்று விளங்க என்ன செய்யலாம்?
Published on
Updated on
2 min read


தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு ஆகியவற்றைப் போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.  

அதன் பிறகு மெல்லிய பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வரவும். பளிச் பாதங்களை நீங்களே காண்பீர்கள்.

இதன் அடுத்த கட்டம், பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்துவிட்டு, நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவுங்கள்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்புள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.  

காலில் காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக அத்தழும்பு மறைந்து விடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com