திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மிளகு ரசத்துக்கு தொட்டுக் கொள்ள அபார சுவையுடன் பிரண்டைத் துவையல்!

கிராமங்களில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் இருந்தால், சாதத்துடன் வெறும் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் வைத்துத் தருவார்கள்.

News image
Updated On :10 ஜூலை 2017, 2:29 pm IST

தேவையானவை:

இளம் தண்டுப் பிரண்டை: 2 கட்டு
உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12
இஞ்சி: 1 துண்டு
பூண்டு: 4/ 5 பல்
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
கல் உப்பு: தேவையான அளவு
பனை வெல்லம்: 1 நெல்லிக்காய் அளவு
செக்கிலாட்டிய நல்லெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு: தாளிக்க

செய்முறை:

பிரண்டையை கணு நீக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் துவையல் செய்து சாப்பிடும் போது போது பற்களில் நார் சிக்கிக் கொண்டே இருக்கும். எனவே கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

Story image

பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும், உளுந்துடன் 1 துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து உறித்த பூண்டுப் பற்களை சேர்த்து, இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட்டு வறுக்கவும். பின்னர் இவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து வெல்லம் கரைந்ததும்  தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். கலவை சற்று ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கவும். பிரண்டை நஙு அரைக்காவிட்டால் பற்களில் சிக்கும். எனவே நைஸாக அரைத்தெடுத்து ஒரு சில்வர் கிண்ணத்தில் வழித்தெடுக்கவும். கடைசியாக வாணலியில் 1 டேபிள் ஸ்போன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டி. எண்ணெய் சூடு இறங்கியதும் ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு 10 நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். கெடாது.

பிரண்டையால் என்ன பலன்?

கிராமங்களில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் இருந்தால், சாதத்துடன் வெறும் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் வைத்துத் தருவார்கள். மறுநாளே வயிற்று உப்பிசம் போன இடம் தெரியாமல் மறைந்து விடும். அதோடு பசியே இல்லாமல் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் சாப்பிட வைக்க பாட்டியமார்கள் இதே பிரண்டைத் துவையல் டெக்னிக் தான் பின்பற்றூவார்கள். இனிப்பும், புளிப்பும் சுள்ளென்ற காரமுமாக பிரண்டைத் துவையல் இருந்தால் ரசம் சாதமும், மோர் சாதமும் கொண்டா.. கொண்டா என்று தொண்டைக்குள் இறங்கும். பிரண்டைத் துவையலை வீட்டில் செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் தெரிந்து விடப் போகிறது. 

Image courtsy: Google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.