கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!

சோயா பீன்ஸ் பருப்புகளை  உளுந்துக்குப் பதிலாக  போட்டு ஆட்டி இட்லி சுட்டால்,  இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!
Published on
Updated on
1 min read

உங்களிடம் உள்ள அரிசியில்  சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா, அரிசி வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள் சாதம் வெள்ளையாக இருக்கும்.

நெய் ஜாடியில் ஒரு சிறிய வெல்லக்கட்டியை போட்டு மூடி வைத்துவிட்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் நெய் கெட்டுப்போகாது.

சோயா பீன்ஸ் பருப்புகளை  உளுந்துக்குப் பதிலாக  போட்டு ஆட்டி இட்லி சுட்டால்,  இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

எப்போதும் சாம்பாரில் பெருங்காயத்தைப் பொரித்துத்தான் சேர்ப்போம். மாறுதலாக கொத்துமல்லி விதைகளை  சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாம்பாரில்  சேர்த்துப் பாருங்கள். அதன் மணமே அலாதிதான்.

- கீதா ஹரிஹரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com