தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு ‘தம்பிட்டு’ ரெசிப்பி!

கர்நாடக சிவராத்திரி ஸ்பெஷலான இந்த தம்பிட்டுவில் அரிசியோடு, எள், வறுகடலை, பொரிகடலை, தேங்காய், வெல்லம் எல்லாம் சேர்ப்பதால் சத்தான தின்பண்டம் என்பதில் சந்தேகமில்லை!

News image
Updated On :4 மார்ச் 2019, 11:32 am

நம்மூரில் சுண்டல் செய்து படைத்து விட்டுச் சாப்பிடுவோமில்லையா சிவராத்திரிக்கு. அதைப்போல கர்நாடகாவில் சிவராத்திரிக்கு  ‘தம்பிட்டு’ என்றொரு இனிப்பு செய்து சிவனுக்குப் படைக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி: 1 கப்

பொரிகடலை: 1/4 கப்

ஏலக்காய்: 4

வெல்லம்: 1/2 கப்

வெள்ளை எள்: 1 டேபிள் ஸ்பூன்

வறுத்த நிலக்கடலை: 1/4 கப்

உலர்ந்த தேங்காய்த் துருவல்: 2 டேபிள் ஸ்பூன்

பொரிகடலை :தனியாக 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் :1/4 கப்

செய்முறை:

முதலில் அரிசியை வாணலியில் இட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வெள்ளை எள்ளையும் அதே வாணலியில் இட்டு எள் வெடிக்கும் பக்குவத்தில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.  எள், வறுத்த நிலக்கடலை, 1 டேபிள் ஸ்பூன் பொரிகடலை உலர்ந்த தேங்காய் துருவல் அனைத்தையும் ஒரு பெளலில் கொட்டி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி மற்றும் 1/4 கப் பொரிகடலையை மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்து எடுத்து ஒரு சல்லடையில் சலித்து மேற்கண்ட கலவையுடன் சேர்த்து கலக்கவும். இதைச் செய்யும் போதே மீண்டும் அடுப்பை ஏற்றி கால் கப் தண்ணீர் விட்டு 1/2 கப் வெல்லம் சேர்த்து வெல்லம் கரைந்து நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இறக்கிய பின் வெல்லப்பாகு சூடு ஆறும் முன்பாக கை பொறுக்கும் சூட்டிலேயே மேலே அரைத்துக் களைந்து வைத்துள்ள மாவு பிளஸ் வெள்ளை எள், வறுகடலை, தேங்காய் துறுவல் மிக்ஸுடன் நன்கு கலந்து உருண்டை  பிடித்து வைக்கவும். கிட்டத்தட்ட ரவா லட்டு பதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின் அனைவருக்கும் பரிமாறலாம். சூடாக இருக்கும் போது குழந்தைகளுக்குத் தரவேண்டியதில்லை. 

கர்நாடக சிவராத்திரி ஸ்பெஷலான இந்த தம்பிட்டுவில் அரிசியோடு, எள், வறுகடலை, பொரிகடலை, தேங்காய், வெல்லம் எல்லாம் சேர்ப்பதால் சத்தான தின்பண்டம் என்பதில் சந்தேகமில்லை!

Related Article

எண்ணெயே இல்லாமல் அப்பளம் பொரிக்கலாம்... எப்படி? இதோ இப்படி!

காஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா!

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க அம்மாவின் கைமணத்தில் டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி!

ஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி!

கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.