காய்கறி சூப்பில் பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போதே அடுப்பை சிம்மில் வைத்து விட்டு மற்றொரு பர்னரில் மூடி போட்ட பாத்திரமொன்றில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் ஃப்ரெஷ் பாஸ்தாவை அதில் அளவாக நீரூற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும் அதை இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய பாஸ்தாவை அப்படியே வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காய் கலவையில் கொட்டிக் கிளறவும். நீங்கள் விரும்பிய ஃப்ளேவர் பெற பூசணிக்காயை இறக்கும் முன் அதில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்க்கலாம். இப்போது பூசணிக்காய், பாஸ்தாவில் நன்கு கலந்து மணம் நாசியை நிரப்பும். இந்த் நிலையில் பாஸ்தாவை பிளேட்டில் கொட்டி அதன் மீது துருவிய சீஸ் தூவி மேலே அழகுக்காக நம்மூர் ஸ்டைலில் கொத்தமல்லி இலைகளையோ, புதினாவையோ வைத்து அலங்கரித்து அப்படியே சூடாகச் சாப்பிடலாம்.