கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா!

நம்மூரில் காலை நேரம் என்றால் டீ யோ காப்பியோ அருந்துவோமே அதைப் போல அங்கேயும் டீ அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால், சர்க்கரை சேர்த்து அல்ல உப்பு சேர்த்து அதை அவர்கள் நூன் சாய் என்கிறார்கள்.

News image
Updated On :22 பிப்ரவரி 2019, 5:45 am

கஸ்தூரி ராஜேந்திரன்

காஷ்மீர் என்றாலே நமக்கெல்லாம் குண்டுவெடிப்பும், மனித இழப்பும் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், அங்கேயும் மனிதர்கள் உண்டு, உறங்கி, சந்தோஷித்து, இழப்பு வருகையில் அழுது அரற்றிக் கொண்டு என உலகின் வேறெந்தப் பகுதிகளையும் போல வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த நிஜத்தை நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.

நம்மூரில் காலை நேரம் என்றால் டீ யோ காப்பியோ அருந்துவோமே அதைப் போல அங்கேயும் டீ அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால், சர்க்கரை சேர்த்து அல்ல உப்பு சேர்த்து அதை அவர்கள் நூன் சாய் என்கிறார்கள். இதை தயாரிப்பதற்கென்று தனியாக நம்மூர் ஃபில்டர் போன்றே ஒரு உபகரணம் இருக்கிறது அங்கு. அதன் பெயர் சமவார்.

Story image

சமவாருக்குள் டீ டிகாக்‌ஷனை ஊற்றி அதனுடன் கொதிக்கும் பால் சேர்த்து அது கொதித்ததும் சிறிது பேக்கிங் சோடா சேர்த்தால் போதும் நூன் சாய் தயார். இங்கே நாம் டீயில் சர்க்கரை கலந்து அருந்துவதைப் போல காஷ்மீரில் பேக்கிங் சோடா கலந்து கந்தூர் ரொட்டியில் முக்கி ஊற வைத்துச் சாப்பிடுகிறார்கள். 

கந்தூர் ரொட்டி தயாரிக்க தந்தூரி அடுப்பு தேவை. ரொட்டிகளை வட்ட வட்டமாகத் திரட்டி வைத்துக் கொண்டு தந்தூரி அடுப்பில் ஒட்டி வேக வைத்து வெந்ததும் ஒரு உலோகக் குச்சி மூலமாக பிரித்தெடுத்து நூன் சாய் தொட்டு சாப்பிடுகிறார்கள். இது தான் இங்கத்திய வழக்கம்.

இது ஒரு புதிய டேஸ்ட். புதிதாக அந்த ஊருக்கு வருபவர்களுக்கும் இந்த டேஸ்ட் பிடித்துப் போவது தான் அதன் ஸ்பெஷாலிட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.