கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அடுத்ததாக ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா?

News image
Updated On :16 நவம்பர் 2016, 11:45 am IST

கரன் ஜோகரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இந்தித் திரைப்படம் ’ஏ தில் ஹை முஷ்கில்’ முக்கோண உறவுச் சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தப் படத்தின் கதைக்கேற்ப ஐஸ்வர்யா ரன்பீருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா அப்படி நடித்ததில் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லை எனவும், அதனால் தான் கரன் அமிதாப்புக்காக ஏற்பாடு செய்த ஸ்பெஷல் ஷோ வைக் கூட அமிதாப்பும், அவரது மனைவி ஜெயபாதுரியும் பார்க்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்திகள் உலவுகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கணவரும் பாலிவுட் ஹீரோவுமான அபிஷேக் பச்சனுக்கும் தன் மனைவி இப்படி நடித்ததில் மனக்கசப்பு என்றும்; அதனால் தான் அபிஷேக் ஐஸ்வர்யாவை விட கடந்த சில வருடங்களாக தான் தத்தெடுத்துக் கொண்ட கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

இப்போது ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

திருமணத்திற்குப் பிறகு ஹீரோக்களுக்கு எப்போதுமே இப்படியான சங்கடங்கள் வருவதே இல்லை. அப்படியே மனைவியோ, வாரிசுகளோ விருப்பமின்மையைக் காட்டினாலும் ஹீரோ நடிகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அந்த ஹீரோக்களின் மனைவிகளும் நடிகைகள் என்று வரும் போது தான் சிக்கல் தொடங்குகிறது. இப்போது கணவர், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, தனது குழந்தைகளின் எதிர்கால உளவியலையும் மனதில் வைத்து அவர்கள் தங்களது திரையுலக வாழ்வை யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. இது தான் திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகளின் நிலை. சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா? பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.