கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அடுத்ததாக ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா?

News image
Updated On :25 ஜனவரி 2024, 12:13 am IST

கரன் ஜோகரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இந்தித் திரைப்படம் ’ஏ தில் ஹை முஷ்கில்’ முக்கோண உறவுச் சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்தப் படத்தின் கதைக்கேற்ப ஐஸ்வர்யா ரன்பீருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா அப்படி நடித்ததில் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லை எனவும், அதனால் தான் கரன் அமிதாப்புக்காக ஏற்பாடு செய்த ஸ்பெஷல் ஷோ வைக் கூட அமிதாப்பும், அவரது மனைவி ஜெயபாதுரியும் பார்க்க மறுத்து விட்டதாக பாலிவுட்டில் செய்திகள் உலவுகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கணவரும் பாலிவுட் ஹீரோவுமான அபிஷேக் பச்சனுக்கும் தன் மனைவி இப்படி நடித்ததில் மனக்கசப்பு என்றும்; அதனால் தான் அபிஷேக் ஐஸ்வர்யாவை விட கடந்த சில வருடங்களாக தான் தத்தெடுத்துக் கொண்ட கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் எனவும் கூறப்படுகிறது.

இப்போது ஐஸ்வர்யா என்ன செய்யப் போகிறார்?

திருமணத்திற்குப் பிறகு ஹீரோக்களுக்கு எப்போதுமே இப்படியான சங்கடங்கள் வருவதே இல்லை. அப்படியே மனைவியோ, வாரிசுகளோ விருப்பமின்மையைக் காட்டினாலும் ஹீரோ நடிகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அந்த ஹீரோக்களின் மனைவிகளும் நடிகைகள் என்று வரும் போது தான் சிக்கல் தொடங்குகிறது. இப்போது கணவர், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, தனது குழந்தைகளின் எதிர்கால உளவியலையும் மனதில் வைத்து அவர்கள் தங்களது திரையுலக வாழ்வை யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. இது தான் திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகளின் நிலை. சரி இப்போது ஐஸ்வர்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? குடும்பத்தினர் மனம் கோணாத படியான கதாபாத்திரஙளைத் தேர்ந்தெடுத்து நடிப்பாரா? அல்லது இதெல்லாம் கலை உலகப் பயணத்தில் சகஜம் என்று புறக்கணித்து விடுவாரா? பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.