பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

புதுமையான சுவையான பாயசம் இது!

தோசை, ஆப்பம் செய்யும்போது கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2018, 5:19 pm IST

தோசை, ஆப்பம் செய்யும்போது கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால் கோலியளவு புளியை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, எண்ணெய்யில் தொட்டு தோசைக் கல்லில் தேய்த்தபிறகு மாவை வார்த்தால் தோசை எடுப்பதற்கு எளிதாக வரும்.

இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் ஒரு உருளைக்கிழங்கினை தோலுடன் வைத்து மூடி விட்டால் மிருதுவாக இருக்கும். புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி சுட்டால் மணமும் சுவையும் சூப்பராக இருக்கும்.

இரண்டு வாழைப் பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒன்றரை டம்ளர் பால் கலந்து கொதிக்க வைத்து ஏதாவது ஒரு எசன்ஸ் ஊற்றினால் புதுமையான சுவையான பாயசம் ரெடி.

தேன் குழல் மாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துப் பிசைந்து செய்தால் தேன்குழல் கரகரப்புடன் இருக்கும்.

Story image

காலிஃப்ளவரை சமைக்கும்போது சிறிது பால் சேர்க்க வெள்ளை நிறம் மாறாது. பச்சை வாடை தெரியாது.

பரோட்டா அல்லது நான் செய்யும் மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக குடிக்கிற சோடாவை ஊற்றிப் பிசைந்து பாருங்கள். பரோட்டா மிருதுவாக பஞ்சுபோன்று மெத்து மெத்தென்று வரும்.

தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நமது  உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.