ராகுல்காந்தி கடந்த மாதம் தமிழகம் வந்த போது அவரது மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டவர் தமிழகக் காங்கிரஸ் முகங்களில் ஒருவரான கே.வி தங்கபாலு. அவரது மொழிபெயர்ப்பு குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஓய்வு பெற்ற காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனிதுரையைத் தேர்வு செய்துள்ளனர். இன்று சேலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் ராகுலின் அருகில் நின்று கொண்டு ராகுல் பேசப் பேச அதை அப்படியே அழகுத் தமிழில் மொழிபெயர்த்தவர் பழனிதுரையே! இனி ராகுலின் தமிழக வருகைகளின் போது புதிய மொழிபெயர்ப்பாளராக இவரே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.