
அதிக உடல் எடை அல்லது அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கொண்டவர்களுக்கு புற்றுநோயை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ) உள்ளவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இந்நிலையில் குண்டாக இருப்பவர்களுக்கென ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை குறித்த ஆய்வில், அதிக எடை கொண்டவர்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களுடன் போரிடும் குணம் கொண்டவர்கள் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளர் கணேசன் கிச்செனடாஸ் கூறுகையில், 'அதிக எடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2.8 மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். அதிக எடை மற்றும் உடல் பருமன் இரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றில் வளர்சிதை மாற்ற விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
கரோனரி இதய நோய், இஸ்கிமிக் ஸ்ட்ரோக்(ischemic stroke) மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை தாக்கும் அபாயங்கள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கேன்சர் நோயை எதிர்க்கும் திறன் அதிகமாக இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமா ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 1,434 பேர் பங்கேற்றனர். இதில் 49% பேர் சாதாரண எடை கொண்டவர்கள், 34% பேர் அதிக எடை மற்றும் 7% பேர் உடல் பருமன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.