டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன?

நகை செய்யும் போது தங்கக்கட்டியை 24 காரட்டிலிருந்து 22 காரட்டாக மாற்ற வேண்டும். அதற்காக 1200 டிகிரி செண்டிகிரேட்டில் தங்கத்தை சூடு படுத்துகிறோம். அப்படி சூடு படுத்தும்போது தங்கத்தில் கொஞ்சம் ஆவியாகிறது

News image
Updated On :20 ஜூன் 2019, 6:04 pm IST

இந்தக் கேள்வி ஜீ தமிழ் சேனலின் தமிழா தமிழா ரியாலிட்டி ஷோவில் ஒரு பெண்மணியால் கேட்கப்பட்டது. இதே கேள்வி நம்மில் பலருக்கும் இருப்பதால் நான் பார்த்ததை இங்கே பகிர்கிறேன்.
அவரது கேள்விக்குப் பதில் அளித்தார் ‘மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அசோசியேஸன்’ மெம்பரான பரத் சர்மா. அவரளித்த பதில் இதோ;

‘கோல்ட் ரேட் பார்த்தீர்கள் என்றால் அது  'ரா' கோல்டுக்கான விலை. அதாவது கட்டியாக வாங்கும் தங்கத்திற்கான விலை. அதிலிருந்து நாம் நகை செய்யும் போது தங்கக்கட்டியை 24 காரட்டிலிருந்து 22 காரட்டாக மாற்ற வேண்டும். அதற்காக 1200 டிகிரி செண்டிகிரேட்டில் தங்கத்தை சூடு படுத்துகிறோம். அப்படி சூடு படுத்தும்போது தங்கத்தில் கொஞ்சம் ஆவியாகிறது. அதே போல ஒரு தங்கக்கட்டியை ஆபரணமாக மாற்றும் போது ஆரம்பம் முதலே கணக்கிட்டால் முதலில் ஆவியாகும் தங்கத்தில் கொஞ்சம் சேதாரமாகும். பிறகு ஆபரணமாக்கும் போது மெஷின் கட்டிங்கில் கொஞ்சம் தூளாகும் தங்கம் மூலமாக கொஞ்சம் சேதாரம் ஆகும். இப்படி சேதாரம் ஆகும் தங்கத்தைத்தான் 10% முதல் 18% வரை சேதாரமாகக் கழிக்கிறார்கள். இந்த 10% வைத்து ஒரு நகைக்கடைக்காரர் பெரிய லாபம் பார்த்து விட முடியாது. இன்றைக்கு உலகத்தில் இருக்கும் அத்தனை தொழில்களையுமே எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வெளிப்படையான பிஸினஸ் நடப்பது தங்கத்தில் மட்டும் தான்.’

- என்கிறார் அவர்;

கேள்வி கேட்ட பெண்மணி அவரளித்த பதிலில் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. அவர் மேலும் ஒரு சந்தேகம் கேட்டார்.

ஆவியாகும் தங்கத்தை விடுங்கள், மெஷினில் கட் செய்யும் போது தூளாகும் தங்கத்தை சேதாரம் என்று எப்படி ஒப்புக் கொள்வது? அதுவும் தங்கம் தானே? என்றார்.

அதற்கு பரத் சர்மா, ‘எல்லாத் தொழில்களிலுமே ‘தொழில் ரகசியம்’ என்று ஒன்றிருக்கும் அம்மா, அதைப்பற்றி நான் பேசக்கூடாது’ என்று முடித்துக் கொண்டார்.

தங்கத்தில் பொற்கொல்லர்கள் பேணும் தொழில் ரகசியம் என்னவாக இருக்கும்? 

இன்று பாரம்பர்ய பொற்கொல்லர்களைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் கூட கோல்டு பிஸினஸில் இறங்கி விட்டன. அவர்களுக்கும் இந்த ரகசியமெல்லாம் அத்துப்படியா?

நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது இப்படிப் பல கேள்விகள் முளைத்தன.

தினமணி வாசகர்களில் நகைக்கடை அதிபர்களும் இருக்கலாம். பெருமளவில் நகை வாங்கிச் சேமிக்கும் நகை ஆர்வலர்களும் இருக்கலாம், சொத்து வாங்குவதைக் காட்டிலும் நகை வாங்குவதே சிறந்த முதலீடு என்று கருதுபவர்களும் இருக்கலாம். அவர்களில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட கேள்விக்குப் பதில் அளிக்கலாம்.

தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் தங்கம் சார்ந்த மேலும் பல கேள்விகளுடனும் காத்திருக்கிறோம்

தினமணி இணையதளக்குழு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.