25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

திருமணமான 23 நாட்களில் கணவரை கைவிட்டு லெஸ்பியன் பார்ட்னருடன் வாழச்சென்ற இளம்பெண்!

இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி 

Published On :7 பிப்ரவரி 2024, 3:37 pm IST

ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 23 நாட்களில் தன் கணவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். தற்போது அவர் இருக்குமிடத்தை கண்டறிந்துள்ளதாக ராஜஸ்தான் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிய காவல்துறையினர் ஹரியானா மாநிலம் மானெசரில் அந்தப் பெண் வசிப்பதை கடந்த திங்களன்று கண்டுபிடித்தனர். 

அந்த இளம்பெண் தனது கணவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியேறி ஹரியானாவில் வசிக்கும் தனது லெஸ்பியன் பார்ட்னருடன் வாழத் தொடங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்குமான உறவு இன்று நேற்று தொடங்கியதில்லையாம், கடந்த 4 வருடங்களாக இவர்கள் உறவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரது புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதும் அவர்கள் இருவரும் தங்களது நிலை குறித்து வாதிட்டனர். தாங்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் தங்களுக்கான துணை மற்றும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அத்துடன் தனக்கு நடந்த திருமணமே குடும்பத்தாரின் வற்புறுத்தலின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக நிகழ்ந்தது என்பதால் தன்னால் அந்த உறவில் நீடிக்க முடியாது என்றார் ராஜஸ்தானிய இளம்பெண்.

இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று வாழலாம் எனக் கூறி சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து விஷயத்தைச் சுமுகமாக முடித்து வைத்தனர்.
 

Related Article

நாயுடுவின் வீடு - அலுவலகத்தை இடிக்க உத்தரவு... பொது நலம் பேணுதலா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா?!

மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாய் இருக்கலாம்! அதனால் என்ன?

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்து இறங்க முயன்ற பயணி!

மெகாத்தொடர் அடிக்ட் பெண்களுக்கு, அண்ணன் சீமானின் உருக்கமான அட்வைஸ்!

சட்டுன்னு முதுகுவலி தீர இந்தாங்க பிடிங்க 5 ஈஸி யோகாசனாஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.