25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாத ஆஸ்திரேலியா, பிழையாகிப் போன 16,92,000 கோடி ரூபாய்!

சுமார் 400 மில்லியன் டாலர் நோட்டுகள் இவ்விதமாக பிழையுடன் அச்சடிக்கப்பட்டு 46 மில்லியன் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அவற்றை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 16,92,000 கோடி ரூபாய்

Published On :7 பிப்ரவரி 2024, 3:36 pm IST

கேன்பெரா, ஆஸ்திரேலியா: சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வென்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா, கடந்த வருடத்தில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்கும் வகையிலான அம்சங்களுடன் கூடிய புதிய A$50 நோட்டுகளை அறிமுகப்படுத்தின. மஞ்சள் நிறத்திலான அந்த டாலர் நோட்டுகளில் ’responsibility' எனும் வார்த்தை மீச்சிறு தவறுடன் ‘responsibilty' என்று அச்சாகி விட்டது. மீச்சிறு தவறென்பது அளவைப் பொறுத்தது. ஆனால், அது ஏற்படுத்திய விளைவு தான் தற்போது ரசிக்கக் கூடியதாக இல்லை.

ஏனெனில் தற்போது சுமார் 400 மில்லியன் டாலர் நோட்டுகள் இவ்விதமாக பிழையுடன் அச்சடிக்கப்பட்டு 46 மில்லியன் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அவற்றை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 16,92,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் பிழை ஏற்பட்டுள்ளது. இப்போது என்ன செய்வது? வேறு வழியில்லை மீண்டும் பிழையான அந்த டாலர் நோட்டுக்களை மாற்றித்தான் ஆக வேண்டும். அந்த வேலையை இந்த ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளவிருக்கிறதாம் ஆஸ்திரேலியா.

சரி இந்தத் தவறு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பிழையான புதிய டாலர் நோட்டைப் பெற்ற ஆஸ்திரேலியர் ஒருவர் அதை புகைப்படம் எடுத்து, 'responsibilty' பிழையை வட்டமிட்டுக் காட்டி சமூக ஊடகங்களில் பகிர அதன் பின்னரே இத்தகைய மாபெரும் பிழை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சரி பிழையாகிப் போன அந்த டாலர் நோட்டுக்களை வருட இறுதியில் என்ன செய்வார்கள்? நம்மூரில் பணமதிப்பிழப்பு சமயத்தில் வங்கிகளால் திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுக்களை அரசு மற்றும் தனியார் அலுவலகக் கோப்புகளாக மாற்றி மறு உபயோகத்திற்கான வழிமுறை கண்டறியப்பட்டது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பேப்பர்லெஸ் பரிவர்த்தனை முறை பின்பற்றப்பட்டால் இந்தப்பிழையான ரூபாய் நோட்டுக்களின் கதி என்னவாக ஆகும் என்று தெரியவில்லை.

Related Article

கிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா?

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!

2021 லாவது தீருமா 'மூன் லேண்டிங்' சர்ச்சைகள்! (விடியோ)

தமிழகத்தில் பிறப்பது விளையாட்டு வீரர்களின் துரதிர்ஷ்டமா?! வாங்க தெரிஞ்சுக்கலாம் கோமதி மாரிமுத்து ஜெயித்த கதையிலிருந்து!

அமர் சித்ர கதா ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.