ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'ஆடி, பி.எம்.டபிள்யூ. கார் வைத்திருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்' - எச்சரிக்கும் ஆய்வு!

பி.எம்.டபிள்யூ மற்றும் ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பவர்கள் பாதசாரிகளுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 5:43 am

DIN

பி.எம்.டபிள்யூ மற்றும் ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களின் ஓட்டுநர்கள் பாதசாரிகளுக்காக கார்களை நிறுத்துவது மிகவும் குறைவு என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

லாஸ் வேகாஸின் நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் போக்குவரத்து மற்றும் சுகாதார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

மிகவும் பிரபலமான வாகனங்களை வைத்திருப்பவர்கள் ஆர்வ மிகுதியில் வெளியில் நடப்பதை கொண்டுகொள்ளாமல் வாகனத்தை இயக்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. 

ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்த 461 கார்களில், 28 சதவீதத்தினர் மட்டுமே பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கு கார்களை நிறுத்துகின்றனர். 

பாதுகாப்பு என்று வரும்போது பாதசாரிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். கார் ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேலாக வாகனத்தை செலுத்தக்கூடாது. ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த அடிப்படைக் கல்வி அவசியம் என்று வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள். 

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பாதசாரிகள் சாலையை கடக்கும்போது ஏற்படும் ஆபத்து சராசரியாக மணிக்கு 16 மைல் வேகத்திற்கு 10 சதவீதம் என்றும், 23 மைல் வேகத்திற்கு 25 சதவீதம் ஆபத்து என்றும், அதேபோன்று 31 மைல் வேகத்திற்கு 50%, 39 மைல் வேகத்திற்கு 75%, 46 மைல் வேகத்திற்கு 90% ஆபத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

எனவே, பாதசாரிகளை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து சரியான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவ வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.