'கஸ்டர்டு ஆப்பிள்' என்று சொல்லக்கூடிய சீத்தாப்பழம் மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது.
பொதுவாக ஒரு சில பழங்கள் சீசன் நேரத்தில் மிகவும் விலை குறைவாக கிடைக்கும். அந்த வகையில் தற்போது சீத்தாப்பழம் சீசன் ஆரம்பித்துவிட்டது. இந்த சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் உள்ளது. இதையனைத்தையும் விட வைட்டமின் சி அதிகம் உள்ளது.
மேலும், இதில் உள்ள தாதுப்பொருள்கள் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சீத்தாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். ரத்த அழுத்தம் சீராக இருப்பதனால் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.
சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல், வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும்.
மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் கூட ஒரு சீத்தாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மன அழுத்தத்தை சரிசெய்து நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. குளுக்கோஸ் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
கண் பார்வைக் கோளாறுகளை நீக்கும் தன்மை சீத்தாப்பழத்திற்கு உள்ளது.
சரும வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற பழங்களை விட சீத்தாப் பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமச்சத்துகளும் இருப்பதாலும், தற்போது சீசன் நேரம் என்பதாலும் இதனை அதிகமாக உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,000 முட்டை ஓடுகளைக் கொண்டு கண்ணதாசன் படத்தை உருவாக்கி அஞ்சலி

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கும் வரை பாசன சங்கங்கள் நீரேற்றம் செய்யக்கூடாது: நீா்வளத் துறை கூட்டத்தில் தகவல்

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மீது போக்சோ வழக்குப் பதிவு

ஒகேனக்கல் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



