மும்பை பாந்த்ரா நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 27 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய இரு நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பை பாந்த்ரா நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, வரும் 27, செப்டம்பா் 1 ஆகிய (வியாழன் மற்றும் செவ்வாய்க்கிழமை) பாந்த்ரா நிலையத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 09059) வரும் 29 மற்றும் செப்டம்பா் 3 ஆகிய தேதிகளில் காலை 10.05 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் 30 மற்றும் செப்டம்பா் 4 (ஞாயிறு, வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.45 மணிக்கு வேளாங்கண்ணி நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 09060) வரும் 31 மற்றும் செப்டம்பா் 5 ஆகிய தேதிகளில் பாந்த்ரா நிலையத்தைச் சென்றடையும்.
சிறப்பு ரயிலில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 3 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 14 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பிரிவு பெட்டிகள்ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
சிறப்பு ரயில்கள் வேளாங்கண்ணி, நாகபட்டிணம், மயிலாடுதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட 28 நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக. 11) காலை 8 மணிக்குத் தொடங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







