தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கைந்து துளசி இலைகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

News image
துளசி
Updated On :4 ஜனவரி 2021, 12:12 pm

DIN

மூலிகைச் செடிகளில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கைந்து துளசி இலைகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

நீரிலும் துளசி இலைகளைப் போட்டு லேசாக கொதிக்கவைத்து பின்னர் அந்த நீரை பருகலாம். 

காய்ச்சல், தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு துளசி நீர் நல்ல பலனைத் தரும். 

தலைவலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் துளசி இலையை அரைத்து பற்றுப்போட தலைவலி காணாமல் போகும். 

கண் பிரச்னைகள் பலவற்றுக்கும் துளசி இலை பெரிதும் பயன்தரும். 

துளசி இலைகளை தொடர்ந்து சாப்பிடும்பட்சத்தில் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சளி, இருமல் இருந்தாலும் துளசி இலைகளை அப்படியே சாப்பிட்டு வர அல்லது துளசி நீரை அருந்திவர ஒரு சில நாள்களில் மாற்றத்தை உணர முடியும். 

நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் துளசிச் சாறு பலனளிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.