6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல நன்மைகள் கொண்ட லெமன் கிராஸ் தேநீர்!

எலுமிச்சைப் புல்(லெமன் கிராஸ்) என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் விளையும் ஒரு மூலிகையாகும்.

News image
Updated On :27 ஜூன் 2022, 7:34 am

DIN

எலுமிச்சைப் புல்(லெமன் கிராஸ்) என்பது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் விளையும் ஒரு மூலிகையாகும். ஆனால் இப்போது உலகின் பல நாடுகளில் விளைகிறது. இது சமையலில் ஒரு பொதுவான மூலப்பொருளாகும். ஆனால் தேநீர் தயாரிக்க லெமன் கிராஸ் பயன்படுகிறது.

லெமன்கிராஸ் தேநீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


லெமன்கிராஸ் தேநீரின் நன்மைகள்

1. கவலையை நீக்குதல்

லெமன்கிராஸ் தேநீர் கவலையைக் குறைக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்குகிறது. 

2. கொழுப்பை குறைக்கும்

லெமனகிராஸ் தேநீர் கொழுப்பை குறைக்க உதவுகிறது

3. தொற்றுநோயைத் தடுக்கும்

லெமன்கிராஸில் சில தொற்றுநோயைத் தடுக்கும் திறன்கள் உள்ளதால், தொற்றை போக்கப் பயன்படுகிறது. ஹெச்ஐவி போன்ற தொற்று உள்ளவர்களின் பாதிப்பை இந்த மூலிகை பாதுகாக்கிறது.

4. பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாயை சுத்தமாக வைத்திருக்கவும் லெமன் கிராஸ் பயன்படுகிறது. இந்த எலுமிச்சைப் புல்லை(லெமன் கிராஸ்) மென்று சாப்பிடலாம். பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி லெமன்கிராஸ் மூலிகையில் உள்ளது.

5. வலி நிவாரணம்

லெமன்கிராஸ் தேநீர் வலி நிவாரணியாக பயன்படுகிறது. இந்த தேநீரை தொடர்ந்து உட்கொள்ளும் போது வலியை உணராமல் இருக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.

6. இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கும்

2015 ஆம் ஆண்டின் ஆய்வின் முடிவுகள் படி , லெமன்கிராஸ் தேநீரை தொடர்ந்து 30 நாட்களுக்கு குடிப்பதால், ஹீமோகுளோபின் செறிவு மற்றும் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

7. வயிற்று உப்புசம் நீங்கும்

லெமன்கிராஸ் தேநீரை குடிப்பதால்  சிறுநீர் வெளியேறும் பண்பு அதிகரிக்கும். வயிற்று உப்புசம் நீங்கும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.