தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

8 மணி நேரத் தூக்கம் தேவையில்லை: ஆய்வில் புதிய தகவல்

ஒருவர் சராசரியாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று நாம் அறிந்துள்ளோம். ஆனால் அது ஒரு நபரின் மரபணுவைப் பொறுத்து மாறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

News image

கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2022, 12:42 pm

நியூயார்க்: ஒருவர் சராசரியாக எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று நாம் அறிந்துள்ளோம். ஆனால் அது ஒரு நபரின் மரபணுவைப் பொறுத்து மாறுபடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், தூக்கத்தைப் பொறுத்தவரை, தூங்கும் நேரத்தை விட தூக்கத்தின் தரம் முக்கியமானது. குடும்ப இயற்கை குறுகிய தூக்கம் (FNSS) உள்ளவர்கள் இரவில் நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்க விரும்புகிறார்கள். அவர்கள் முழுமையாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளனர்.

இந்த திறமையான தூக்கத்தை செயல்படுத்துவதில் பங்கு வகிக்கும் ஐந்து மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் எட்டு மணிநேர தூக்கம் தேவை என்று ஒரு கோட்பாடு உள்ளது. ஆனால் மரபியல் அடிப்படையில் மக்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு வேறுபடுகிறது என்பதை தங்களது ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று நரம்பியல் நிபுணர் லூயிஸ் ப்டாசெக் கூறினார்.

மூளையின் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தூக்கப் பிரச்சினைகள் காரணம் என்று லூயிஸ் ப்டாசெக் கூறினார்.

நாம் தூங்குவதற்கும், விழிப்பதற்கும் நம்முடைய மூளையின் பல பாகங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். மூளையின் இந்த பாகங்கள் சேதமடையும் போது, தூங்குவது அல்லது தரமான தூக்கத்தை கடினமாக்குகிறது. 

தூக்கமின்மையை தடுக்க உதவும் மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தரமான தூக்கத்தை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.