தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!

தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது.

News image
Updated On :21 நவம்பர் 2022, 6:05 pm IST

தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே ஒருவேளையும் ஓடாது. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு ஏன் தலைவலி வருகிறது என்று கூட கண்டறிய முடியாது. 

இந்த தலைவலிக்கு உணவுகள் கூட காரணமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது சில உணவுகளைச் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். 

என்னென்ன உணவுகள்? பார்க்கலாம்!

♦ சீஸ் அதிகம் சாப்பிட்டால் தலைவலி ஏற்படும்.  தைரமைன் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து தலைவலியை ஏற்படுத்துகிறது. 

♦ ரெட் ஒயின் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி ஏற்பட வாய்ப்பு அதிகம். 

♦ சாக்லெட்டிலும் தைரமைன் இருப்பதால் அதிகம் சாப்பிட்டால் தலைவலிக்கு ஆளாகலாம். 

♦ செயற்கையாக தயாரிக்கப்பட்ட இனிப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் தலைவலி வரும். 

♦ உங்களுக்கு பால் வாசனை பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் பால் குடித்தால் தலைவலி ஏற்படும். பொதுவாக ஒவ்வாத வாசனைகள் அடங்கிய உணவுப் பொருள்களை உட்கொண்டால் தலைவலி ஏற்படும். 

♦ அதுபோல சிலருக்கு எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். அதில் உள்ள ஆக்டோபமைன் தலைவலியை ஏற்படுத்தும். 

♦ அதுபோல சிலருக்கு தயிர், நிலக்கடலை ஆகியவையும் தலைவலியை உண்டாக்கலாம். 

♦ எனவே, தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் இந்த உணவுகளைத் தவிர்த்துப் பார்க்கலாம். தொடர்ச்சியாக தலைவலி ஏற்படும்பட்சத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.