6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிள்ளைகள் சண்டையிடும்போது பெற்றோர் செய்யக்கூடாதவை

வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாக, கதைபேசி, சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கலாம். ஆனால் அது நம்முடைய வழக்கமில்லை. 

News image
பிள்ளைகள் சண்டையிடும்போது பெற்றோர் செய்யக்கூடாதவை
Updated On :12 செப்டம்பர் 2022, 11:23 am

DIN


வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாக, கதைபேசி, சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கலாம். ஆனால் அது நம்முடைய வழக்கமில்லை. 

சகோதரர்கள், சகோதரிகள், சகோதர-சகோதரிகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம், மோதல் என்பது வரத்தான் செய்யும். அதுதான் இயல்பு. அதைத்தான் நீங்களும், நாங்களும் இந்த ஒட்டுமொத்த உலகமும் இளம் வயதில் செய்தது. செய்திருக்கிறது. செய்து கொண்டிருக்கிறது. எனவே, இதில் எந்த விநோதமும் கவலையும் இல்லை.

சரி. இந்த சண்டை என்பது ஒன்று உண்டானால், அதற்கு சமாதானம் என்ற ஒன்றும் இயற்கையாகவே இருக்கும். ஆனால், இந்த சண்டைக்குள் பெரியவர்கள் ஒருவர் தலையிடும் போதுதான் அது தலைவலியாக மாறுகிறது.

குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்ளும்போது பெற்றோர் வாயை மூடிக் கொண்டு விலக்கிவிடலாமே தவிர, வார்த்தைகளால் பஞ்சாயத்து செய்யக் கூடாது. நீங்கள் எவ்வளவு பெரிய விஜயகாந்தாகவோ சரத்குமாராகோவ இருந்தாலும் கூட, உங்களுக்கு இந்த பஞ்சாயத்துக்கு நிச்சயம் சரிவராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சரி அப்படியே ஒரு பஞ்சாயத்தில் இறங்கினாலும், நீங்கள் சொல்லக் கூடாதவை என்று சில இருக்கின்றன.

நீதான் பெரியவன்/சிறியவன். நீ தான் விட்டுக் கொடுக்க வேண்டும்.
நீ ஏன் உன் சகோதரன் /சகோதரி போல இல்லை.
நீ உன் சகோதரனையோ / சகோதரியையோ வெறுக்கக் கூடாது.
நீ எதையும் மிகைப்படுத்திக் கூறுகிறாய்.
உன் சகோதரனோ சகோதரியோ அவ்வாறு பேசும்போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிடு.
நீ தான் எப்போதும் பிரச்னையை உருவாக்குகிறாய்.

மற்ற பிள்ளைகள் போல ஏன் ஒற்றுமையாய் இருப்பதில்லை என்பன போன்ற அர்த்தமற்ற வாக்கியங்களைக் கூறி பஞ்சாயத்தை பெரிதாக்கி விட வேண்டாம். இது சரியாகக் கூடிய சண்டையைக் கூட பெரிதாக்கி, ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் கூட சென்றுவிடலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.