பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உடல் எடையைக் குறைக்கும் இலவங்கப்பட்டை!

இலவங்கப்பட்டை... பிரியாணி, குருமா ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு பொருள். உண்மையில் இதன் பயன் என்னவென்று தெரியுமா?

Published On :

இலவங்கப்பட்டை... பிரியாணி, குருமா ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு பொருள். உண்மையில் இதன் பயன் என்னவென்று தெரியுமா?

இலவங்கப்பட்டையில் ஆன்டி - ஆக்சிடன்ட் அதிகம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை உள்ளது. 

உடலில் கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

மாரடைப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம்.

இதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கும். இதயத் தசைகளை வலுவடையச் செய்கின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கும்.

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும். 

ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளையும் சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. 

வயிற்றுக்கோளாறுகளையும் சரிசெய்யும். 

எப்படி பயன்படுத்தலாம்? 

இலவங்கப்பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் அருந்தி வரலாம். 

தேநீரில் இலவங்கப்பட்டை போட்டு குடிப்பதும் நல்ல பலனைத் தரும். 

நாட்டு மருந்து கடைகளில் இலவங்கப்பட்டை பொடி கிடைக்கும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.