புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது, புற்றுநோய்களுக்கு வளர்ந்த நாடுகளில் மட்டும்தான் சிகிச்சை பெற முடியும், பெண்களுக்கு மட்டும்தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படும்.
இவ்வாறு புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா.
புற்றுநோய் ஏற்பட்டால் மரணம்தான் நிகழும், வளர்ந்த நாடுகளில் மட்டுமே இதற்கு சிகிச்சையளிக்க முடியும்
அனைத்து புற்றுநோய்களும் வேறுபட்டவை. ஒரே புற்றுநோயின் வெவ்வேறு நிலைகளில்கூட கணிப்புகள் மாறுபடும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் ஏறக்குறைய அனைத்து புற்றுநோய்களும் குணப்படுத்தக்கூடியவை.
ஆரம்ப நிலை புற்றுநோய்க்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை பெறலாம். ஆனால், முற்றிய புற்றுநோய்க்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சையளிக்க முடியாது. அதேநேரத்தில் இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சை, உலகளவில் உள்ள சிகிச்சைகளுக்கு இணையாக உள்ளது.
மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்
ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் விகிதம் 3% என்ற அளவில் உள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கு பெண்களுக்கு என்ன சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறதோ அதுவேதான் ஆண்களுக்கும். மேலும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வலியற்ற கட்டிகள்தான் உருவாகும்.
சிகிச்சையின்போது புற்றுநோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அவசியம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புறநோயாளிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளிகள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.
இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? அவசியம்தானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலிய நோயாளிக்கு ரோபோடிக்ஸ் உதவியுடன் தில்லியில் மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

மாா்பகப் புற்றுநோய்: பெண்ணுக்கு உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சை

குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சை

அறுவைச்சிசிச்சைக்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம்: எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. துணை வேந்தா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


