கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா? - நம்பிக்கையும் உண்மையும்!

புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா. 

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 5:47 pm IST

புற்றுநோயைக் குணப்படுத்த முடியாது, புற்றுநோய்களுக்கு வளர்ந்த நாடுகளில் மட்டும்தான் சிகிச்சை பெற முடியும், பெண்களுக்கு மட்டும்தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படும். 

இவ்வாறு புற்றுநோய் குறித்த பல தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் தில்லி புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் பிரக்யா சுக்லா. 

புற்றுநோய் ஏற்பட்டால் மரணம்தான் நிகழும், வளர்ந்த நாடுகளில் மட்டுமே இதற்கு சிகிச்சையளிக்க முடியும்

அனைத்து புற்றுநோய்களும் வேறுபட்டவை. ஒரே புற்றுநோயின் வெவ்வேறு நிலைகளில்கூட கணிப்புகள் மாறுபடும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் ஏறக்குறைய அனைத்து புற்றுநோய்களும் குணப்படுத்தக்கூடியவை.

ஆரம்ப நிலை புற்றுநோய்க்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிகிச்சை பெறலாம். ஆனால், முற்றிய புற்றுநோய்க்கு இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சையளிக்க முடியாது. அதேநேரத்தில் இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சை, உலகளவில் உள்ள சிகிச்சைகளுக்கு இணையாக உள்ளது.

Story image

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் விகிதம் 3% என்ற அளவில் உள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கு பெண்களுக்கு என்ன சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறதோ அதுவேதான் ஆண்களுக்கும். மேலும் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வலியற்ற கட்டிகள்தான் உருவாகும். 

சிகிச்சையின்போது புற்றுநோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அவசியம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புறநோயாளிகள் அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சையின்போது நோயாளிகள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.