பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வாசிப்பதற்காக மெனக்கெட்டு இந்த லைப்ரரிக்குப் போகனும்னா சொத்தை வித்து தான் எடுத்துக்கிட்டு போகனும்!

இந்த நூலகத்தின் உள்ளே புத்தக அலமாரிகளுடன் சில படுக்கை அறைகளும் உள்ளன. நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் வசதி கெடாமல் அவர்களது வாசிப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வரக்கூடாது என்ற நோக்கில்

News image
Updated On :5 மார்ச் 2018, 3:38 pm IST

இங்கே பாருங்க அதிசயத்தை, கட்டில் இருக்காம் படிச்சிக்கிட்டே தூங்கலாமாம் இந்த லைப்ரரியில்!

இது பிரிட்டனின் ஒரே ஒரு ஸ்பெஷல்  ‘குடியிருப்பு நூலகம்’ என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த நூலகத்துக்குச் சென்று விட்டீர்கள் என்றால் உங்களது வாசிப்புக்கு எந்த வித இடையூறும் கிடையாது. நடுவில் தூக்கம் வந்தாலும் சரி, இல்லையேல் இரவாகி விட்டதென்றாலும் சரி. உங்களை யாரும் வெளியேறச் சொல்லி தொல்லை செய்யப் போவதில்லை. இந்த நூலகத்தின் உள்ளே புத்தக அலமாரிகளுடன் சில படுக்கை அறைகளும் உள்ளன. நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் வசதி கெடாமல் அவர்களது வாசிப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வரக்கூடாது என்ற நோக்கில் உள்ளேயே சோபாக்கள், நாற்காலிகளுடன் படுக்கை அறைகளும் கொண்டு மிக நவீனமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த நூலகம்.

பிரிட்டனின் வடக்கு வேல்ஸ் எல்லைப்புறமிருக்கும் சிறிய நகரமான ஹாவர்டெனில் இருக்கும் அழகான நூலகத்தின் பெயர் ‘கிளாட்ஸ்டோன்ஸ் லைப்ரரி’ இங்லீஷ் பார்டர் பகுதியிலிருந்து சுமார் 40 நிமிடப் பயணத்தொலைவில் இது அமைந்திருக்கிறது. பிரிட்டனின் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரே ஒரு குடியிருப்பு நூலகம் என்ற தனிச்சிறப்பும் இதற்கு உண்டு. இதன் சில அறைகள் படுக்கை வசதி, படிப்பதற்குத் தோதாக மேஜை, டேபிள், ரீடிங் லேம்ப் வசதிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வசதியான லாட்ஜ் அறைகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

விக்டோரியன் மாநில உறுப்பினராகவும், 4 முறை பிரிட்டன் பிரதமராகவும் பதவி வகித்த வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் என்பவரால் 1800 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 32,000 புத்தகங்களுடன் இந்த நூலகம் துவக்கப்பட்டதாகத் தகவல்.

நம்மூர் நூலகங்களைப் போலவே இன்று இந்த நூலகத்தில் தொடர் நிகழ்வுகளாக தினமொரு இலக்கியக் கூட்டம், தியேட்டர் நாடகங்கள், சிறந்த பேச்சாளர்களின் உரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், உலக இலக்கிய விழாக்கள் எனப் பல முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றனவாம்.

அதனால் கிளாட்ஸ்டோன் நூலகத்துக்கு வாருங்கள், இங்கே வந்து தங்கி, வாசித்து, உங்களைத் தளரச் செய்து ரிலாக்ஸாக வெளியேறுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர் இந்த நூலக நிர்வாகிகள்.

இந்தியாவில் இருப்பவர்கள் மெனக்கெட்டு வாசிப்பதற்காக இந்த நூலகத்தைச் தேடிச் செல்வதென்றால் சொத்தை விற்று எடுத்துக் கொண்டு போனால் தான் ஆயிற்று. இம்மாதிரியான நூலகங்களை விரும்புகிறவர்கள் பேசாமல் இப்படி ஒரு நூலகத்தை நம்மூரிலேயே வடிவமைத்து விடலாம். நம்மூரில் புத்தகங்களுக்கா பஞ்சம். இல்லை பழம்பெரும் படைப்பாளிகளுக்குத்தான் பஞ்சமா?

புத்தகப் புழுக்களுக்கு இம்மாதிரியான சிறப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் இருந்தால் அவர்களுக்கு வீட்டு ஞாபகமே வராமல் போனாலும் ஆச்சர்யமில்லை.

பிரிட்டனில் இருக்கும் இந்த நூலகத்தை தனியார் ஒருவர் தான் நிறுவியிருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் தனியார் முயற்சியில் இப்படி ஒரு நூலகம் அமைந்தால் அதில் நுழைவதற்கு 5 நட்சத்திர விடுதிக்கு இணையாகக் கட்டணம் வசூலிக்கப்படும் அபாயமும் உண்டு. எனவே அரசு சார்பில் மாநிலத் தலைநகரங்களில் மட்டுமேனும் இப்படியான நூலகங்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்திய அரசின் நூலகத்துறை ஆவண செய்யுமா?!

Related Article

விளம்பர உலகின் சத்ய சோதனை! முகம் காட்டும் முதலாளிகள்... சேனல் மாத்தினாலும் வந்துடறாங்களே!

‘பெற்றோரைக் கொண்டாடுங்கள்’ அம்மா ஸ்ரீதேவி நினைவுகளில் கரைந்து மகள் ஜான்வி கபூர் எழுதிய உருக்கமான கடிதம்!

ஸ்ரீதேவியின் வாழ்வில் எத்தனை மாயங்களோ? போனி கபூர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா?

சங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை! ஆண்களுக்கும், பெண்களுக்கும்...

தமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.