வெளிநாடுகளில் எகிறிக் கொண்டிருக்கும் தமிழக முருங்கைக் கீரையின் மவுசு!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கடகுளம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நெல்சன் வெளிநாடுகளுக்கு முருங்கைக் கீரை இலைகளை தெர்மாக்கோல் பெட்டிகளில் அடைத்து ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறார்.
துபாய், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நம்மூர் முருங்கை இலைகளுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பால் இது சாத்தியமானது என்று கூறும் நெல்சன், ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரான நெல்சன் முருங்கை இலைகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு வியந்து அவற்றை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளை எடுத்தார். அவரது முயற்சி வெற்றியைத் தந்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளைப் பகுதியில் அமோகமாக நடைபெற்று வரும் முருங்கை சாகுபடியை ஒட்டி கடந்த 2 வருடங்களாக நெல்சன் முருங்கை இலைகளை ஐஸ்பார் பொருத்தப்பட்ட தெர்மாக்கோல் பெட்டிகளில் பிளாஸ்டிக் உறைகளில் இட்டு அடைத்து ஏற்றுமதி செய்து வருகிறார்.
இதைப்பற்றி நெல்சன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்;
‘ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி நிறுவனமொன்றில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த எனக்கு, நாமே இந்த ஏற்றுமதித் தொழிலில் இறங்கினால் என்ன என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஏற்றுமதி லைசென்ஸ் எடுக்கும் முறைகளை எல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சொந்தமாக ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக நானாக முயன்று ஏற்றுமதி லைசென்ஸ் எடுப்பது எப்படி எனத் தெரிந்து கொண்டேன். அதன் பயனாக இன்று என்னால் 50 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர முடிந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அரசாங்க உதவி இருந்தால்... அதாவது ஐஸ் பிளாண்ட், பேக்கிங் ஹவுஸ், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட கண்டெய்னர் வண்டிகள் என அரசு உதவி கிடைத்தால் என்னால் இத்துறையில் மேலும் 1000 பேருக்கு வேலை தர முடியும்.’
- என்கிறார்.
முருங்கை இலை மற்றும் முருங்கைக் காய்க்கு கிடைத்த வரவேற்பால் இந்தப் பகுதியில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது.
Concept courtesy: Thanthi TV
Related Article
இன்று புத்த பூர்ணிமா... புத்தரின் பொன்மொழிகளில் சில உங்களுக்காக...
பிரதமரை வரவேற்க ஒற்றைப் பூவா? பூங்கொத்துக்கு பெறுமானமானவர் இல்லையா மோடி!
அடேயப்பா! இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
மரமே நடாம குழந்தைங்களைப் பெத்துப் போட்டுட்டு இருந்தா அதுங்க தண்ணிக்காக அடிச்சிக்கிட்டு செத்துராது?!