எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க...

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:54 am IST

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இயற்கை மனிதனுக்குக் கிடைத்த கொடை. தன்னை மறந்து இயற்கையை ரசிப்பவர்கள் பலர். மனதுக்கு இதமளிக்கும் இயற்கை அழகு அனைவரையும் வசீகரிக்கும். 

இயற்கை மனநிலையுடன் தொடர்புடையது. இயற்கையான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்பது உண்மை. மனநிலை சரியில்லாதவர்கள்கூட சுற்றுலா இடங்களுக்கு சென்று வருவதுண்டு. அது மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும். 

அந்தவகையில் இயற்கை குழந்தைகளிடமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையோடு இணைந்த குழந்தைகளுக்கு உணர்ச்சிகள் குறித்தப் பிரச்னை குறைவாக இருக்கிறது. 

Story image

இயற்கையோடு வாழும் குழந்தைகள் இயல்பாக நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இயற்கையின் மீது தொடர்பு இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு கோபம், பதட்டம் போன்ற பிரச்னைகள் இல்லாதிருப்பது தெரிய வந்துள்ளது. 

Story image

குழந்தைகளுக்கு புத்தக அறிவுடன் இயற்கை சார்ந்த அறிவும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். குழந்தைகளை அதிக நேரம் வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும், பள்ளிகளில் தோட்டக்கலை, பின்தங்கிய பகுதி மக்களின் நிலை அறிதல் என இயற்கை மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைந்து இருக்கும்பட்சத்தில் குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரோனா காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள குழந்தைகளின் மன ஆரோக்கியம் குறித்து பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு விளையாட விடவேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.