தேவையான பொருட்கள்:
வாஷிங் சோடா: 400 கிராம்
சமையல் சோடா: 400 கிராம்
தூள் உப்பு: 100 கிராம்
சிட்ரிக் ஆசிட்/ எலுமிச்சம் பழம்: 100 கிராம்/ ஒரு முழு எலுமிச்சம் பழம்
தயாரிப்பு முறை:
ஒரு கப்பில் 400 கிராம் அளவுக்கு வாஷிங் சோடா எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 400 கிராம் அளவுக்கு சோட உப்பு எடுத்துக் கொள்ளவும். இதில் 100 கிராம் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பை எடுத்துக் கொள்ளவும். அயோடைஸ்டு உப்பாக இல்லாமலிருந்தால் நல்லது. இவற்றுடன் 100 கிராம் சிட்ரிக் அமிலம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை துகள்களாகக் கடைகளில் கிடைக்கும். அப்படிக் கிடைக்காவிட்டால் 1 முழு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து மேலே சொல்லப்பட்ட பொருட்களுடன் சேர்த்து ஒரு நாள் முழுமையும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு கரண்டியால் நன்கு கலந்து ஒரு பெரிய ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டால் பலநாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாத்ரூம் சுவர் மற்றும் தரைகளைச் சுத்தம் செய்ய இந்த கலவை மிக அருமையாக உங்களுக்கு உதவக்கூடும்.
யூ டியூப் தளத்தில் ‘ஆஸ்க் ஜான்ஸி’ என்ற பெயரிலான கிளீனிங் டிப்ஸ் வீடியோக்கள் பிரபலம். அதில் சில சுமாராக இருந்தாலும் இந்த டிப்ஸ் அனைவரும் பயன்பெறக் கூடிய விதத்திலும் குறைவான ரசாயணக் கலப்புடனும் இருந்ததால் பலருக்கும் பயன் தரலாம்.
ஜான்சியின் கிளீனிங் டிப்ஸை நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.
நன்றி: ஆஸ்க் ஜான்ஸி!
Related Article
வீட்டுப் பராமரிப்பில் நம்மை டென்சனில் தள்ளும் சில விடாப்பிடிக் கறைகளை நீக்கச் சில எளிய வழிகள்!
உங்கள் பெயிண்ட் நச்சு வாயுக்களை வெளியேற்றக் கூடியதா? தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கு பெயிண்ட் அடிங்க பாஸ்!
பேக்கிங் சோடா அலைஸ் சோடியம் பை கார்பனேட்டை சமையலறை தாண்டி வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?!
வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?
வாவ் சூப்பர் ஐடியா! வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 மணி நேரங்கள்; 5 செட்கள்! அரையிறுதியில் ஜோகோவிச்
இதுவரை இல்லாத மோசமான தோல்வியைச் சந்தித்த இந்தியா!

மானியத்தில் மின் மோட்டாா்கள் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

விபத்து அதிகம் நடைபெறும் சாலைப் பகுதிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் நேரில் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



