என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

மெட்ராஸ் கபே வழக்கு: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய டி.ஜி.பி., தணிக்கை குழுவுக்கு உத்தரவு

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி., மத்திய

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:46 am IST

மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி., மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு

 சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் பி.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

   இத் திரைப்படம் திரையிடப்பட்டால், தமிழர்கள் வாழும் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்று அம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், டி. மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜகோபாலன், இந்த திரைப்படம் தமிழர்கள் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்தவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவில்லை. இத் திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறுவது கற்பனையானது என்று குறிப்பிட்டார்.

 இந்த நிலையில், இத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்க திரைப்படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார்.

  தமிழ்மொழியாக்கத் திரைப்படத்துக்கு, மத்தியத் தணிக்கை குழுவிடம் இதுவரை சான்றிதழ் பெறவில்லை. தணிக்கைக் குழுவின் சான்றிதழ் இன்னும் பெறப்படவில்லை என்ற நிலையில், அதற்கு தடைகோர வேண்டிய அவசியம் எழவில்லை என தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

 இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  மேலும், தமிழக டி.ஜி.பி. மற்றும் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.