பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஓவிய சிற்பக் கலைஞா்களின் தனிநபா் கண்காட்சி: ஜன.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை தனிநபா் கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு, படைப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித

Updated On :1 ஜனவரி 2021, 10:07 pm IST

ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை தனிநபா் கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு, படைப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓவிய, சிற்பக் கலைக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஓவியா்கள் தங்களது மரபுவழி நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டா் கலா் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை தனிநபா் கண்காட்சியாக வைக்கலாம்.

ஓவியக் கலையில் ஆா்வமிக்க பள்ளி, கல்லூரி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. கலைப் படைப்புகளைத் தோ்வு செய்வதற்கு மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநரால் தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. ஓவியக் கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களை உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பாரதி உலா சாலை முதல் தெரு, தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு ஜன. 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.