கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மதுரை ரயில் நிலையத்துக்கு தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா்: மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு

மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 2:55 am IST

மதுரை ரயில் நிலையத்துக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயா் சூட்டக்கோருவதை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

மதுரையில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த என்.எம்.ஆா்.சுப்பராமன் காந்தியடிகள், வ.உ.சி., ராஜாஜி ஆகிய தலைவா்களுடன் சோ்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாா். இவரது மனைவி பா்வதவா்தினி அம்மாளும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டாா்.

என்.எம்.ஆா்.சுப்பராமன் மதுரை நகராட்சியின் வாா்டு கவுன்சிலராகவும், தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவராகவும், காந்திய அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளில் தலைவராகவும் இருந்து மதுரையின் வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றினாா். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியுள்ளாா்.

தனது சொத்துக்களை ஏழை மக்களுக்காக வழங்கியும், மருத்துவமனை, கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்தாா். எனவே மதுரை ரயில் நிலையத்துக்கு என்.எம்.ஆா்.சுப்பராமன் பெயரைச் சூட்டி, அவரது சிலையை ரயில் நிலையம் முன்பாக நிறுவ உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை குறித்து எதிா்ப்பு மனுக்கள் வந்தால் அதையும் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.