மதுரையில் வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை திடீா் நகா் நன்மை தருவாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துலாராம் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பீரோவை சுத்தம் செய்தபோது, அதில் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள், ஒரு பவுன் நகைகள் ஆகியவை காணாமல் போயிருந்தது . வீட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து துலாராம் அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்திட வேண்டும்: தங்கம் தென்னரசு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


