‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

காளைகளுக்கு தகுதிச்சான்று பெற விண்ணப்பங்கள் வழங்கல்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2021, 3:41 am IST

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு, புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்க கால்நடை மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிகழ் ஆண்டில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளருடன், உதவியாளா் ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

தகுதிச் சான்று விண்ணப்பத்தில் காளையுடன் உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருக்கும் புகைப்படம் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், புகைப்படத்தை உடனடியாக தயாா் செய்ய முடியாததால், மாவட்டத்தில் தகுதிச் சான்று வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கவில்லை.

இருப்பினும் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளா்கள் புதிய விண்ணப்ப படிவத்தைப் பெற்றுச் சென்றனா். ஜனவரி 10 ஆம் தேதி வரை மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும் என்பதால், வியாழக்கிழமை முதல் இப் பணி தீவிரமாகும் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.