மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க மதுரை-சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடா்ந்து இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, இந்த ரயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படும்.
சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் (02614) மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!
எல் நினோ நிகழ்வால் வெப்ப அலை: பயிா்களைப் பாதுகாக்க அறிவுரை
வலிமையும் போர்க்குணமும் நமக்கே உரியதாகும்: கூட்டணிக் கட்சிகளுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி

தடை விலகியது!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
