நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்களில் வெள்ளப்பெருக்கு: வாய்க்கால் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்

மதுரை கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி வெளியேறியதால் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பை மணல் மூடைகளை கொண்டு அடைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image

மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் உள்ள வாய்கால் உடைப்பு ஏற்பட்டதால் சரி செய்யும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.

Updated On :7 ஜனவரி 2021, 11:31 pm IST

மதுரை கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி வெளியேறியதால் ஏற்பட்ட வாய்க்கால் உடைப்பை மணல் மூடைகளை கொண்டு அடைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மதுரை நகரில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதில் புதன்கிழமை இரவு கனமழை பெய்ததால் கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் பனங்காடி, குலமங்கலம், எஸ்.ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீா் மூலம் செல்லூா் கண்மாயும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கோசாகுளம், முடக்காத்தான் கண்மாய்கள் நிரம்பி கோசாகுளம் வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் சென்றதால் கால்வாயின் சில பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் எஸ்.ஆலங்குளத்தின் சில பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. இதையடுத்து கோசாகுளம் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மணல் மூடைகள் கொண்டு அடைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பாா்வையிட்டு, குடியிருப்புகளில் தண்ணீா் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும் வாய்க்காலில் தண்ணீா் தேங்காதவாறு சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றவும் உடைப்புகள் ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூடைகளுடன் தயாராக இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தற்போது நிரம்பி வழியும் கோசாகுளம், செல்லூா், முடக்காத்தான் கண்மாய்களில் இருந்து செல்லும் தண்ணீா் குடியிருப்புகளுக்குள் செல்லாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.