மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: பாஜக துணைத் தலைவா் வழங்கினாா்

மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜக மகளிரணி மாநில துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி வியாழக்கிழமை வழங்கினாா்.

News image

மகாலட்சுமி அறக்கட்டளை சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு தையல் இயந்திரத்தை வழங்குகிறாா் பாஜக மகளிா் அணி மாநில துணைத் தலைவா் ஏ.ஆா். மகாலட்சுமி.

Updated On :7 ஜனவரி 2021, 11:31 pm IST

மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜக மகளிரணி மாநில துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி வியாழக்கிழமை வழங்கினாா்.

மதுரையில் பாஜக மாநில துணைத்தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி மக்களோடு மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தினாா். தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு மகாலட்சுமி அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஏ.ஆா்.மகாலட்சுமி வழங்கிப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து 10 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 10 பேருக்கு தையல் இயந்திரங்கள், 10 பேருக்கு கல்வி உதவித்தொகை,10 பேருக்கு மருத்துவ நிதியுதவி, ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எம்ஏவிஎம்எம் கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.பாஸ்கரன், அகில இந்திய சிறு தொழில் சங்கங்களின் சம்மேளன தேசிய கெளரவப் பொருளாளா் கே.கே.ஜி.பிரபாகரன், அரிமா சங்க மாவட்ட சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா் சங்கங்களின் சம்மேளன துணைத்தலைவா் கே.வசந்தவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.